கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 5,102 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது

இந்நிலையில் கர்நாடகா தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், TV 9 எடுத்த புதிய கருத்துக்கணிப்பில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. முன்னதாக TV 9 & c voter நடத்திய கருத்துக்கணிப்பில் காங்., பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது எடுக்கப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில் அது தலைகீழாக மாற்றி, பாஜக 105-110, காங்., 9097, ஜேடிஎஸ் 19-22 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.