பரமக்குடி அருகே கருணாஸ் காரை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்தனர். கருணாஸின் காரின் பின்புறத்தில் இருந்த அனைத்து பொருளையும் அலசி ஆராய்ந்த பறக்கும் படையினர், அவரின் கார் லாக்கரை திறக்குமாறு கோரினர். அதில் எதுவும் இல்லை என்று கூறியவாறே, அதனை திறந்த கருணாஸ், ரஸ்க் பாக்கெட் ஒன்றை எடுத்து போலீசாரிடம் காட்டினார். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டார்.