முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நல திட்ட உதவிகளை அரசும், திமுகவினருக்கு செய்து வருகின்றனர். அந்தவகையில்  மகளிர் உரிமை தொகை வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, மறுபுறம்  மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் 100 பேருக்கு வீடுகள் வழங்க நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் வரும் மாதத்திலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது