ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக மநீம தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்., வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிக்காக நானும் எனது கட்சியினரும் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மநீம அங்கம் வகிப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஜெயக்குமார், கமலின் கட்சியை திமுகவின் பி டீம் எனக்கூறினோம். தற்போது பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது; திமுக ஆட்சி மீது அதிருப்தி உள்ளதால் அதிமுகவின் சாதனை இந்த தேர்தலில் எடுபடும். எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் மக்களின் புரட்சி, எழுச்சி முன் எதுவும் எடுபடாது என்று தெரிவித்தார்.