கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரியின் மாகே பிராந்தியத்தில் உள்ள பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.