அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரே குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அவர்களது பெண் நண்பராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மண்ணுத்தி அருகே உள்ள முடிக்கோடு பகுதியைச் சேர்ந்த 35 வயதான அஞ்சனா மற்றும் திருவனந்தபுரம் கேசவதாசபுரத்தைச் சேர்ந்த 40 வயதான ஆன் மேரி மேத்யூ ஆகியோரே இந்தச் சோகச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்களுடன் பழகி வந்த அனிலா என்ற பெண்ணே இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்ததாகக் கூறி உறவினர்கள் தரப்பில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை மதிய வேளையில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆன் மேரியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அனிலா அவரை கத்தியால் குத்திக் கொன்றதாகவும், அதேபோல் அஞ்சனாவை காரால் மோதிக் கொலை செய்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன் மேரிக்கும் சந்தேகத்திற்கிடமான அந்தப் பெண்ணுக்கும் இடையே வேலைவாய்ப்பு தொடர்பான முன்விரோதம் இருந்திருக்கலாம் என்று அண்டை வீட்டார் தெரிவிக்கின்றனர்; இருப்பினும், அஞ்சனா கொலப்பட்டதற்கான சரியான காரணம் குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.
கலிபோர்னியா காவல்துறையினர் கொலையாளி அனிலாவை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆன் மேரி கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த நிலையில், அஞ்சனா கடந்த 6 ஆண்டுகளாக அங்கு ஆசிரியையாகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த திடீர் கொலைச் சம்பவம் அமெரிக்காவில் உள்ள மலையாளி சமூகத்தினர் மத்தியிலும், கேரளாவில் உள்ள உயிரிழந்தவர்களின் சொந்த ஊர்களிலும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Two Malayali women were killed in California, United States, allegedly by another Malayali woman who was their friend and lived in the same apartment complex, according to their relatives. An investigation is underway.
One of the victims was identified as 35-year-old Anjana from… pic.twitter.com/oAPKHTz3Df
— Hate Detector 🔍 (@HateDetectors) August 31, 2026
“>
இதற்கிடையே, இரு பெண்களின் உடல்களையும் உடனடியாகத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மூலமாக வெளியுறவு அமைச்சகத்திற்குத் தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
