பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின் தேன்மொழி என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ஜாக்குலின் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.

அதாவது தொகுப்பாளினியாக இருக்கும் போது நிகழ்ச்சிக்கு வரும் சில பிரபலங்கள் அத்துமீறி நடந்து கொள்வார்களாம். தங்களை பெரிய நடிகர்கள் என்று நினைத்துக் கொண்டு அனுமதி இல்லாமல் தொட்டுப் பேசும்போது ஓங்கி கன்னத்தில் அறைய வேண்டும் போல் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை ஜாக்குலினின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.