பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழ் சினிமாவில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அடிக்கடி ஏதாவது ஒரு பரபரப்பான கருத்தையும் கூறி வருவார். அந்த வகையில் தற்போது டுவிட்டரில் நடிகை கங்கனா ரணாவத் நான் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்.

அதாவது படப்பிடிப்பின் போது ஹீரோக்களை  அவர்களின் ஹோட்டல் அறைக்கு சென்று சந்திக்க சொன்னார்கள் என்றும் ஆனால் நான் அப்படி செய்ய முடியாது என்று கூறியதால் என்னை பைத்தியம் என்று கூறினார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகை கங்கனாவின் டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.