துருக்கி நாட்டின் மெர்டின் மாகாணத்திற்கு முஹ்லா மாகாணத்தில் இருந்து பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மெர்சின் மாகாணம் யென்கஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.