ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையில் புரட்சி படை பிரிவு உள்ளது. இந்தப் புரட்சி படைப்பிரிவு நேற்று பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொண்டது. பாலிசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல் அடெல் பயங்கரவாத குழுவை குறி வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ஈரானின் பாகிஸ்தான் மீதான இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.