நேபாள நாட்டின் காத்தமான்டுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்த்துள்ளது.

இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 22 பேர் மீட்கப்பட்டு நேபாள் கஞ்சில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதோடு இந்த கோர விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.