ஏடிஎம் அட்டையின் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை வரும் ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ வங்கி உயர்த்தவுள்ளது. கிளாசிக், சில்வர், குளோபல் ஏடிஎம் அட்டைகளுக்கான கட்டணம் ஜிஎஸ்டி சேர்க்காமல் ரூ.125ல் ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல் மற்ற அனைத்து வகை ஏடிஎம் அட்டைகளின் வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் ஜிஎஸ்டி இன்றி ரூ. 75 அதிகரிக்கவுள்ளது. இது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.