சிவகங்கை காங்கிரஸ் கமிட்டியில் பழைய நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து செல்வ பெருந்தகை அதிரடி காட்டியுள்ளார். சிவகங்கை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க திமுகவினர் தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணம் கார்த்திக் சிதம்பரம் தான் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவரின் ஆதரவாளர்களை மாற்றம் செய்து சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், தேவகோட்டைக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.