உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குட்டி குரங்குகள் பாசத்தோடு தங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்ட சம்பவம் நெகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வட மாநிலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விலங்குகள், மனிதர்கள் அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள். அந்தவகையில் இரண்டு குட்டி குரங்குகள் பசியோடு காணப்படுகிறது. மனிதபிமானம் கொண்ட நபர் ஒருவர் பக்கத்திலிருந்து அதற்கு பசியாற்ற பால் புட்டியில் பால் கொடுத்துள்ளார். கடும் பசியிள் காணப்பட்ட குரங்கு தன்னுடைய பசியை போக்கி உயிர்பெற்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.