இன்று தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள் ஆகும். செவ்வாய்க்கிழமைகளில் காலபைரவரை பலரும் வணங்குவதுண்டு அவ்வகையில் இன்று ஆடிச் செவ்வாய் மட்டும் அல்லாது தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்துள்ளதால் இன்றைய தினம்

‘ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்’

‘ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்’

என்ற மந்திரத்தை 27 முறை கூறி காலபைரவரை வழிபடுவதன் மூலம் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும், மன அமைதி கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், கையில் பணப்புழக்கம் செழிப்பாக இருக்கும், சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது வழக்கம்