ஈரோடு அருகே கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் – சுந்தரி தம்பதி. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் கனிஷ்கா என்ற மகள் இருக்கிறார். இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது மர்ம நபர் ஒருவர் பைக்கில் கடத்தி சென்றுள்ளார். இது குறித்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகள் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே சிறுமியை கடத்தி சென்ற வர்ம நபர் சிறுமி அணிந்திருந்த கம்மலை மட்டும் கழட்டிவிட்டு கருங்கல்பாளையம் பகுதியில் விட்டு சென்றுள்ளார். தொடர்ந்து அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.