இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். கடைசியாக இவர் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படி இன்றைக்கு 170 படங்களை நெருங்கியுள்ளார்.  இந்நிலையில் ‘படையப்பா’ படத்தில் “ஓஹோ ஓஹோ கிக்கு ஏறுதே…” என்ற பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். இந்தப் பாடலில் “கம்பங்களி திண்ணவனும் மண்ணுக்குள்ள, தங்க பஸ்பம் திண்ணவனும் மண்ணுக்குள்ள..” என்ற வரி வரும். இதை நோட் செய்த ரஜினி, எம்ஜிஆர்தான் தங்க பஸ்பம் சாப்பிட்டதாக சொல்வார்கள். அதனால், இந்த வரி வேண்டாம் என சொல்லியிருக்கிறார். ஆனால், சர்ச்சை வராது எனக் கூறி ரஜினியை வைரமுத்து சமாதானம் செய்துள்ளார்.