தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த பிறகு தலைமைச் செயலாளராக இறையன்பும், டிஜிபி யாக சைலேந்திரபாபுவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் இருவரது பணிக்காலமும் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து இறையன்புவுக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இயக்குனர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் ஓய்வு பெற உள்ளேன் ஆனால் தனக்கு பணியின் ஆசை தீரவில்லை என டி ஜி பி சைலேந்திரபாபு கூறியுள்ளார். கல்லூரி மாணவர்களிடையே பேசிய அவர், நல்ல கல்வியை கற்றுக் கொள்ளுங்கள். மாணவ மாணவிகள் சாதனை படைக்கும் அளவிற்கு உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை விடுத்துள்ளார்.