சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆச்சரியமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் வெளியாவது வழக்கம், ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்போரின் ரத்தத்தை உறையச் செய்துள்ளது. ஓடும் ரயிலின் இரு பெட்டிகளை இணைக்கும் ‘கப்ளிங்’ (Coupling) எனப்படும் ஆபத்தான இரும்புப் பகுதியில் முதியவர் ஒருவர் அமர்ந்து பயணம் செய்யும் காட்சி இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. ரயில் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு நொடி பிடி நழுவினாலும் மரணம் நிச்சயம் என்ற நிலையில், அந்த முதியவர் அங்கு அமர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
मजबूरी की कोई उम्र नहीं होती, बस एक सफर होता है जो कभी खत्म नहीं होता
जहाँ जान जोखिम में हो और सफर मजबूरी, समझ लेना वहाँ गरीबी की दास्तान अधूरी है
“थकी हुई आँखें और खतरनाक सफर… ये तस्वीर नहीं, व्यवस्था के गाल पर एक तमाचा है
“सफर जारी है, बस मंज़िल का पता नहीं मजबूरी ने उसे… pic.twitter.com/1YlOpmq0Vc— Manzar (@manz39754) January 4, 2026
ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கலாம் அல்லது டிக்கெட் எடுக்க வசதி இல்லாத சூழலாக இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், “இது தனிமனிதனின் தவறல்ல, மாறாக நமது ரயில்வே அமைப்பின் தோல்வி” என நெட்டிசன்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘பாதுகாப்பான பயணம்’ என்று ரயில்வே நிர்வாகம் முழக்கமிட்டாலும், இது போன்ற காட்சிகள் சாமானிய மக்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
