தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த பிறகு தலைமைச் செயலாளராக இறையன்பும், டிஜிபி யாக சைலேந்திரபாபுவும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் இருவரது பணிக்காலமும் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து இறையன்புவுக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இயக்குனர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.