ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங். இவர்கள் இரண்டு பேரும் வேறு வேறு இடங்களில் சில மணி நேர இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அதாவது, ஒருவர் குஜராத்தில் ஒரு வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். இதையடுத்து சில மணி நேரங்களில் மற்றொருவர் ஜெய்ப்பூரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்தார். இவர்கள் எதற்காக இறந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு ஒரே நாளில் இரட்டை சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.