பிறந்து ஐந்தே மாதங்களான பச்சிளம் குழந்தை ஒன்று 4.2 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது என்று சொன்னால் உங்களால்  நம்பமுடிகிறதா? ஆனால் அது உண்மை தான். தனது பேரக் குழந்தையான எக்கிராஹா ரோஹனுக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி ரூ.240 கோடி மதிப்பு கொண்ட 15 லட்சம் பங்குகளை பரிசாக கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அவற்றுக்கான 2024 நிதியாண்டுக்கான சிறப்பு ஈவுத்தொகையாக ரூ.28 (20+8) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் அந்த குழந்தையின் பெயரில் அவருக்கு ₹4.2 கோடி கிடைக்க உள்ளது.