இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்ட சமூக ஊடக பிரபலம், சிலர் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக விலை வசூலிப்பதால் ஹிமாச்சல மக்களின் பெயர் கெடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர், ஹிமாச்சல் மக்களை தவறாக பேச வேண்டாம், மாறாக இவ்வாறு ஏமாற்றுபவர்களுக்கு எதிராக ஒன்றிணைவோம் எனக் கூறியுள்ளார். கசோலியில் இருந்து பின்ஜோர் செல்லும் வழியில், தர்ம்பூர் அருகே ஒரு உணவகத்தில் அவர் சாப்பிட நின்றார். அங்கு ஒரு ஆலு பராத்தாவும் தேநீரும் ஆர்டர் செய்தார். ஆனால், பில் 250 ரூபாய் வந்தது, இது அவரை அதிர்ச்சியடைய வைத்தது.

வீடியோவில், அந்த பிரபலம், ஒரு தேநீருக்கு 150 ரூபாய் வசூலிப்பதாகக் கேள்வி எழுப்புகிறார். உணவகத்தில் இருந்தவர், டிஸ்போசபிள் கப்பில் 20 ரூபாய்க்கும், குல்ஹாரில் 150 ரூபாய்க்கும் தேநீர் என்று பதிலளிக்கிறார். இதைக் கேட்டு, அவர் “என்ன மாதிரியான குல்ஹார் இவ்வளவு விலை?” என்று கேட்கிறார். மேலும், விலைப்பட்டியல் எங்கே உள்ளது என்று வினவுகிறார். பின்னர், தனக்கு குர்கானில் உணவகம் இருப்பதாகவும், 150 ரூபாய்க்கு தேநீர் விற்பது நியாயமற்றது என்றும், உரிமையாளரை அழைக்கச் சொல்லி, அவ்வளவு பணம் தர மாட்டேன் என்று உறுதியாகக் கூறுகிறார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.