
கர்நாடக மாநிலம் மைசூரில் மோனிகா (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனு (22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் செல்போன் மூலம் பேசி வந்த நிலையில் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். இந்த காதல் குறித்து மோனிகா தன் வீட்டில் தெரிவித்துள்ளார். இதேபோன்று மனுவும் தன் வீட்டில் தெரிவித்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காதல் ஜோடிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்த நிலையில் சம்பவ நாளில் மோனிகா தன் காதலனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போன் அழைப்பை எடுக்காததால் வேதனையில் மோனிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கேள்விப்பட்ட மனு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்களின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.