தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் காணப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் வரும் நாட்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300ஐ தொடும் என்று பிரபல பொருளாதார இணையதளமான MoneyControl செய்தி வெளியிட்டுள்ளது.

வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தக்காளி விலை விண்ணை முட்டியுள்ளது. ஆனால் மழை குறையாததாலும், வெள்ளம் பெரும்பாலான பயிர்களை சேதம் செய்துவிட்டதாலும் தக்காளி விலை எளிதில் குறையாது என்று சொல்லப்படுகிறது