சூர்யா தன்னை சந்தித்தது குறித்து பேசிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், நாங்கள் ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ‘கங்குவா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டியில் வரலாற்றுப் படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது..

சமீபத்தில், மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சூர்யா நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படம் சமூகவலைத் தளங்களில் வைரலானது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது இணையதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்..

அதில், ரசிகர் ஒருவர் சூர்யா சச்சினை சந்தித்த புகைப்படத்தை ஷேர் செய்து, அதைப் பற்றி சொல்லும்படி கேட்டார். இதற்கு சச்சின், “நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாக இருந்தோம், ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் இறுதியில் இருவரும் நன்றாகப் பழகினோம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.