கேரளாவின் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகளும், மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், நோட்டாவுக்கு ஒரு வாக்கும் பதிவானதால், தேர்தல் அதிகாரியிடம் காங்., கம்யூ., புகார் அளித்தன. இதுதொடர்பான வழக்கில், புகார் குறித்து விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.