ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி தஸ்தகீர் – அஜீஷா ஆகியோரிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடந்தது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு பெற்றோரிடம் விசாரணை நடத்தியது. தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் குழு அமைக்கப்பட்டது.