உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் நடந்த பயங்கரமான சம்பவம் மனதை உலுக்கியுள்ளது. ஒரு பெண்மணி, முன்னி தேவி (வயது 60), தனது மகன் பைக்கில் பெட்ரோல் நிரப்ப காத்திருக்கும்போது தரையில் அமர்ந்திருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் நின்றிருந்த கார் திடீரென முன்னோக்கி நகர்ந்து, அவரை பயங்கரமாக மோதி நசுக்கியது.
View this post on Instagram
ஓட்டுநர் முன்னால் அமர்ந்திருந்த பெண்ணை கவனிக்கவே இல்லை. இந்த கொடூரமான விபத்தில் அந்த பெண்மணி உயிரிழந்தார். இந்த முழு சம்பவமும் பெட்ரோல் பம்பில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது ஜகதீஷ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாருதி எஸ்டேட் சந்திப்பில் நடந்தது. தற்போது காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியை தேடி வருகிறது.
