நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்தில் 82 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இவை புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் உடல்களை அடையாளம் காண ஒடிசா அரசு அண்டை மாநிலங்களான மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் உதவியை நாடி உள்ளது. அந்தந்த மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இவர்களை அடையாளம் காணும் பணியை துரிதப்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் இரண்டாம் தேதி நடந்த மூன்று ரயில்கள் விபத்தில் பலி எண்ணிக்கை 288 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.