ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் பள்ளி கல்வி செலவை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஏற்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒடிசா ரயில் விபத்து அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நேரத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது நம்முடைய கடமை அந்த வகையில் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய பெற்றோர்களின் குழந்தைகளுடைய கல்வி செலவை முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது. பெற்றோரை இழந்ததால் அந்த குழந்தைகள் கல்வியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது. அவர்களுக்கு நாம் நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.