ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெற வேண்டும் என மணல் சிற்பம் வடித்துள்ளார்.

அந்த மணல் சிற்பமானது, ரயில்கள் மோதி கிடந்த காட்சிகளை தத்ரூபமாக காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.