ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ஃபர்ஹானா எனும் படத்திற்கு ஒருசி ல இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தொவித்துள்ளது. அதன்பின் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டைரக்டர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதவாது “ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஃபர்ஹானா படம் குறித்து ஒருசில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அப்படத்தை எதிர்ப்பது போன்று ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது.

தமிழகம் மத வேற்றுமையை கடந்து ஒரு அமைதி பூங்காவாக எப்போதும் திகழ்கிறது. இனி வரும் நாட்களிலும் அப்படியே தொடரும் என்ற நம்பிக்கையோடு ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வழங்கப்பட்டு இருக்கும் காவல்துறையினர் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.