கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தோனி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். தனது நட்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தோனி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.