சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்புரி மாவட்டத்தை சேர்ந்த ஹரி பிரசாந்த் என்பவர் பணியின் போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை பணி நியமனத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று குழந்தைக்கான பணி நியமன கடிதத்தை அவரது தாயார் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த உடன் முழு அளவிலான காவலராக நியமிக்கப்படுவார் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.