இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இரண்டு வங்கிகளுக்கும் முறையே ரூ.12.19 கோடி மற்றும் ரூ.3.95 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. வங்கி விதிமுறைகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வங்கிகள் கடன்கள், மற்றும் நடத்தை விதிகள் தொடர்பான விதிமுறைகளை மீறியுள்ளன என்ற புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.