5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடு வருகிறார். இந்தநிலையில் ராஜஸ்தானில் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பாஜக ஆட்சி அமைந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்க மறுபரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால், காங்கிரஸ் ஆட்சி செய்த ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.12 அதிகமாக உள்ளது. இந்த விலை உயர்வு குறைக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கிறேன். ஏழை மக்களிடம் கொள்ளை அடித்தவர்கள் சிறை செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிவித்தார்.