திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்களினுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்கள்,  பண்டிகை  தினங்களில் இன்னும் கூடுதலாக பக்தர்கள் வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தீபாவளி முன்னிட்டு திருப்பதி கோவிலில் நவம்பர் 12ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு தங்கவாசல் முன்பாக காலை 7 மணி முதல் ஒன்பது மணி வரை நடைபெறுகிறது.

மேலும் விடுமுறையை ஒட்டிக் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து தீபாவளி ஆஸ்தானம் நிகழ்வுக்கான டிக்கெட் நவம்பர் 10 வெளியிடப்பட உள்ளது. இந்த தீபாவளி ஆஸ்தானம் நிகழ்வுகள் நடைபெறும் சேவை உள்ளிட்ட பிற சேவைகள்  தீபாவளியன்று ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.