மம்மூட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படம் ஏலே படத்தின் அழகியலை திருடி உருவாக்கப்பட்டு உள்ளதாக டைரக்டர் ஹலீதா ஷமீம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஹலீதா ஷமீம் பதிவிட்டுள்ள இருப்பதாவது, ஏலே திரைப்படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து, முதல் முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.

இதனிடையே அதே கிராமத்தில் தான் நண்பகல் நேரத்து மயக்கம் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இப்படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்று அதிர்ச்சியை தருகிறது. என் சிந்தனையும், நான் தேர்வு செய்த அழகியலும் இரக்கமின்றி களவாடப்படும் போது நான் அமைதியாக இருக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.