ஏடிஎம் கார்டு பின் நம்பரை முறைகேடாக பயன்படுத்தி பணத்தை திருடுவது நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை இருமுறை அழுத்தினால் பின் நம்பர் திருடப்படுவதை தவிர்க்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இது தவறான தகவல் என்று மத்திய அரசின் PIB Fact check பிரிவு மறுத்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக பரிவர்த்தனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.