பெங்களூரில் குண்டு வைத்தது தமிழர்கள் என்று பேசி கொச்சைப்படுத்தியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருக்கு எவ்வளவு வாய்க்கொழுப்பு. மக்களுக்கு கொடுப்பது எதுவுமே பிச்சை அல்ல. அது அவர்களின் உரிமை.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்கிறீர்களே, அவர்களிடம் போய் இப்படி பேசுவீர்களா? ஏழைகள் என்றால் இளக்காரமா இந்த ஆணவம்தான் பாஜகவை வீழ்த்தப்போகிறது என திருச்சியில் நடைபெற்றுவரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய வருகிறார்.