பெற்றோராக இருப்பது வெறும் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குப் பெற்றெடுத்துவிட்டு, பின்னர் அக்குழந்தையைத் தங்களது சொந்த விருப்பப்படி மட்டுமே ஆட்டிப்படைப்பது அல்ல” என்பதை உணர்த்தும் விதமாக, தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வெளியாட்கள் யாரோ இருவர் என்று நினைக்கும் அளவிற்கு, கடைக்கு கூட்டிட்டு போயிட்டு வரும்போது தனக்கு ஏதோ பொருள் வேண்டும் என்று அழுது அடம் பிடித்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளையும், அந்தத் தந்தை கொஞ்சமும் இரக்கமில்லாமல் ஓங்கி உதைத்துக் கீழே தள்ளும் காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சை உலுக்குகின்றன.

உண்மையான பெற்றோர் தன்மை என்பது தங்களது சொந்தக் கோபம், தேவையற்ற மற்றும் மோசமான நடத்தைகளைச் சுயக்கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்கும் மிகப்பரந்த உளவியல் தகுதியைக் கோருகிறது என்றும், ஒரு மனிதன் தனது கை மற்றும் நாக்கு ஆகிய இரண்டையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கப் பழகிய பெற்றோராக மாற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தற்பொழுது எச்சரித்து வருகின்றனர்.