தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது எழுதப் படிக்கத் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு 3 மாத சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஆறாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பலர் எழுதப் படிக்கத் தெரியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை இப்போதே தொடங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது