வேலூரில் எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர் ராம்கி குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராம்கியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும், ராம்கியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்