ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பில்வாரா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தது. அந்த சிறுமியின் உடலுக்கு நேற்று இறுதி சடங்கு செய்யப்பட்டு மயானத்தில் வைத்து எரித்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு கண்ணீர் சிந்தி கொண்டிருந்த சிறுமியின் தந்தை திடீரென எரியும் நெருப்பில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை விரைந்து காப்பாற்றி உள்ளனர். தீயில் குதித்ததில் லேசான காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மகள் இறந்த துக்கத்தில் தந்தை இத்தகைய செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.