இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் (98) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் நேற்று வியாழக்கிழமை காலமானார். இவரது மறைவுக்கு நாட்டின் பல்வேறு தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுவாமிநாதனின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.