தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் (88) காலமானார். 1957ம் ஆண்டு பேட்ச் IAS அதிகாரியான ராஜேந்திரன், ராமநாதபுரம் ஆட்சியராகவும், தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது தலைமைச் செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளரும், ஒடிசா முன்னாள் ஆளுநருமான M.M.ராஜேந்திரன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் கூறியுள்ளார். 1989ல் கலைஞர் ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ராஜேந்திரன், அரசு நிர்வாகத்திலும், அரசியலமைப்பு பதவிகளிலும் சிறப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டதாக நினைவுகூர்ந்தார். அதோடு, அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளளார்