சென்னை DON BOSCO பள்ளியில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், கடந்த முறை நான் ஒரு கிறிஸ்தவன் என கூறியது விமர்சனம் ஆனது. மீண்டும் சொல்கிறேன், நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைகொள்கிறேன். நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்தவன்.

இந்து என்று அழைத்தால் இந்து. முஸ்லிம் என்று அழைத்தால் நான் முஸ்லிம். எனக்கென்று சாதியோ, மதமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லிக்கொண்டே இருப்பேன் என பேசினார்.