மும்பை கல்யாண் கிழக்கு கோல்சேவாடி பகுதியில் சனிக்கிழமை நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர், தனது முதலாளி தொடர்ச்சியாக ஆபாச மற்றும் தகாத வகையான செய்திகளை அனுப்பி துன்புறுத்தியதாகக் கூறி, கடைக்குள்ளேயே அவரை செருப்பால் தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியுள்ளன.
தகவலின் படி, சம்பவத்தன்று அந்த பெண் வழக்கம்போல கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, தன்னை தொடர்ந்து துன்புறுத்திய முதலாளியை எதிர்கொண்டு, கோபம் அடங்காமல், பல முறை செருப்பால் தாக்கினார். அந்தச் சண்டைபோன்ற காட்சி கடைக்குள் இருந்த பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. அவர்களில் சிலர் அந்த வீடியோவை தங்கள் கைபேசிகளில் பதிவு செய்தனர். தான் அடையும் துன்புறுத்தலை இனியும் சகிக்க முடியாத நிலையில் தான் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார். வீடியோவில் அவர் அழுதபடியே முதலாளியை தாக்குவது தெளிவாகப் பதிவாகியிருந்தது.
A shocking video has emerged from the Kolsewadi neighborhood in Kalyan, Maharashtra, showing a young woman assaulting a shopkeeper with her slippers after he allegedly molested her while she was working in his store. #kalyan #Women #Molestation #ShopKeeper pic.twitter.com/JnZKQSN9GT
— NextMinute News (@nextminutenews7) September 13, 2025
இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறையினரால் எந்தவொரு அதிகாரப்பூர்வக் கருத்தும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், சம்பவத்தைத் தொடர்ந்து அந்த இளம்பெண் தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளதுடன், பலரும் பெண் ஊழியருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் அழுத்தத்தினை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறை விரைவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதுசமூக நீதிக்காக பல்வேறு பிரிவினரின் கேள்விகள் வலுத்துவரும் நிலையில், அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.
