கோரக்பூரில் ஒருவர் ஒரே நேரத்தில் 2 அரசுப் பணிகளை செய்து கடந்த 8 வருடங்களாக சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆச்சரியமான வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோரக்பூர் கேம்பியர்கஞ்ச் பகுதியிலுள்ள சோனௌரா புசுர்க் கிராமத்தில் வசிக்கக்கூடிய தர்கேஷ்வர் சிங், பகலில் மின்சாரக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் லைன்மேனாகவும், இரவில் பாதுகாவலராகவும் பணிபுரிந்தார்.

அதன்படி கடந்த 8 வருடங்களாக 2 துறைகளின் கண்களில் மண்ணை தூவி சம்பளத்துடன் மற்ற வசதிகளையும் அனுபவித்து வந்தார் தாரகேஷ்வர் சிங். எனினும் அவர் எப்போது தூங்கினார், எப்படி 2 வேலைகளையும் செய்தார், எப்படி இது சாத்தியமானது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இதுகுறித்த விசாரணை விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை.